ஈரோட்டில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை


ஈரோட்டில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Oct 2021 10:14 PM GMT (Updated: 15 Oct 2021 10:14 PM GMT)

ஈரோட்டில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு
ஈரோட்டில் கடன் தொல்லையால் தூக்குப்போட்டு பெயிண்டர் தற்கொலை செய்து கொண்டார்.
பெயிண்டர்
ஈரோடு ஈ.பி.பி. நகர் தென்னந்தோப்பு தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 39). பெயிண்டர். இவருடைய மனைவி நந்தினி. செந்தில் குடும்ப செலவுக்காக சிலரிடம் கடன் வாங்கி உள்ளதாக தெரிகிறது. இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டுள்ளனர். தொழில் சரிவர இல்லாததால் அவரால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் கடந்த ஆண்டு செந்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவரை உறவினர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர். இதற்கிடையில் கடன் கொடுத்தவர்கள் மீண்டும் கடனை திருப்பி கேட்டுள்ளனர்.
 தற்கொலை
கடனை திருப்பி செலுத்த முடியாமல் செந்தில் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். எனினும் அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.
உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே செந்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story