பெண்ணிடம் 8 பவுன் சங்கிலி பறிப்பு

x
தினத்தந்தி 19 Oct 2021 2:44 AM IST (Updated: 19 Oct 2021 2:44 AM IST)
நாங்குநேரி அருகே பெண்ணிடம் 8 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்று விட்டனர்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தை சேர்ந்தவர் அரங்கநாதன் (வயது 43), லாரி டிரைவர். இவருடைய மனைவி அனுஷபதி (42). இவர் நேற்று அதிகாலை வீட்டுவாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் அனுஷபதி அணிந்திருந்த 8 பவுன் தாலி சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





