தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை


தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 19 Oct 2021 8:05 PM GMT (Updated: 19 Oct 2021 8:05 PM GMT)

திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருப்பரங்குன்றம், 

திருப்பரங்குன்றம் சன்னதிதெரு 16 கால் மண்டபம் அருகே வசித்து வருபவர் சரவணன். டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சூரியகுமார் (வயது 22). இவர் நேற்று முன்தினம் இரவில் அவரது வீட்டில் ஒரு அறையில் தூக்குப்போட்டு தொங்கினார்.இந்த நிலையில் சூரியகுமாரின் பெற்றோர் தனது மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு கடைக்கு வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை என்று தேடியதாக தெரிகிறது.இந்த நிலையில் சரவணன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது சூரியகுமார் பிணமாக தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து தகவலறிந்த திருப்பரங்குன்றம் போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து சூரியகுமார் தற்கொலைக்கு காரணம் என்ன? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story