வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு

x
தினத்தந்தி 20 Oct 2021 8:29 PM IST (Updated: 20 Oct 2021 8:29 PM IST)
வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு
கோவை சின்னியம்பாளையம் சின்னதோட்டம் தெருவை சேர்ந்தவர் கவிதா (வயது 45). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது மகளுடன் உடுமலையில் உள்ள சகோதரர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அவர், 2 நாட்கள் கழித்து வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப் பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரம், 2 கிராம் தங்கம், வெள்ளிக்கொலுசு ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





