பரமத்திவேலூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை


பரமத்திவேலூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை
x
தினத்தந்தி 20 Oct 2021 4:52 PM GMT (Updated: 20 Oct 2021 4:52 PM GMT)

பரமத்திவேலூர் அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை

பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் மேற்கு வண்ணாந்துறையை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் குமரேசன் (வயது 32) கட்டிட மேஸ்திரி. குமரேசனுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவருடைய பெற்றோர் பெண் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குமரேசன் திருமணம் செய்து கொள்ள மறுத்து வந்ததாக தெரிகிறது.
இதனை பெற்றோர் குமரேசனை கண்டித்துள்ளனர். இந்தநிலையில் குமரேசன் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கினார். உயிருக்கு போராடிய அவரை பெற்றோர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குமரேசன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story