ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி- புதிதாக 89 பேருக்கு தொற்று


ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி- புதிதாக 89 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 21 Oct 2021 9:59 PM GMT (Updated: 21 Oct 2021 9:59 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானார்கள். மேலும் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
89 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 579 பேருக்கு பரிசோதனை செய்ததில் 91 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 3 ஆயிரத்து 617 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 84 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரத்து 58 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
2 முதியவர்கள் பலி
இதற்கிடையில் 73 வயது முதியவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த 18-ந்தேதி கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி முதியவர் இறந்தார்.
இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி, சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரும் கடந்த 19-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 681 ஆக உயர்ந்தது. தற்போது தொற்று உள்ள 878 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story