ஒரு வழிப்பாதையாக மாற்றம்


ஒரு வழிப்பாதையாக மாற்றம்
x
தினத்தந்தி 25 Oct 2021 8:34 PM GMT (Updated: 25 Oct 2021 8:34 PM GMT)

நேதாஜி முருகன் கோவில் முதல் ஜான்சிராணி பூங்கா வரை ஒரு வழிப்பாதையாக மாற்றம்

மதுரை
மதுரை நேதாஜி முருகன் கோவில் முதல் ஜான்சி ராணி பூங்கா வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது குறித்து மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை நகர், பிற மாவட்டங்கள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மீனாட்சி அம்மன் கோவில், நகைக்கடைகள், ஜவுளிக்கடைகளுக்கு செல்லும் வழியாக மேலமாசிவீதி, நேதாஜி ரோட்டில் சந்திப்பது வழக்கம். மேலும் இந்த சந்திப்பில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலும் அமைந்துள்ளது. எனவே இந்த சாலையில் அதிக வாகன போக்குவரத்து, பாதசாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை காலம் என்பதால் அந்த சாலையில் போக்குவரத்து ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.
எனவே அந்த பகுதியில் வாகன நெரிசலை குறைப்பதற்காக ஜான்சிராணி பூங்கா முதல் நேதாஜி ரோடு முருகன் கோவில் வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஜான்சிராணி பூங்காவில் இருந்து முருகன்கோவில் வழியாக மேலமாசி வீதி, திருப்பரங்குன்றம் சாலைக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இனி கான்சாமேட்டுத்தெரு, டி.எம்.கோர்ட்டு வழியாக மேலமாசி வீதிக்கு வரமுடியும். அதே போன்று மேலகோபுரத்தெரு, மேல ஆவணி மூலவீதியில் இருந்து வரும் வாகனங்களும் நேதாஜி ரோடு முருகன் கோவிலுக்கு செல்வதற்கு கான்சாமேட்டுத் தெரு, டி.எம்.கோர்ட்டு, மேலமாசி வீதி கோவிலுக்கு செல்ல முடியும். எனவே இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story