எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி


எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி
x
தினத்தந்தி 25 Oct 2021 8:50 PM GMT (Updated: 25 Oct 2021 8:50 PM GMT)

மதுரை கோட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை
மதுரை கோட்டத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பொதுப்பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொதுப்பெட்டிகள்
கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களில் பொதுப்பெட்டிகளுக்கும் முன்பதிவு செய்து மட்டுமே பயணம் செய்ய முடியும். 
இதற்கிடையே, வருகிற 1-ந் தேதி முதல் மதுரை கோட்டத்துக்கு உள்பட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களில் பொதுப்பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. 
அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.02627/02628) மற்றும் ராமேசுவரம்-திருச்சி சிறப்பு ரெயில் (வ.எண்.06850/06849) ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டுகளில் பயணம் செய்யலாம். 
திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில், அதிவிரைவு ரெயில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த ரெயிலில், டி-13 முதல் டி-16 வரையிலான பெட்டிகளும், திருச்சி-ராமேசுவரம் ரெயிலில் டி-5 முதல் டி-8 வரையிலான பெட்டிகளும் முன்பதிவு இல்லாதவை ஆகும்.
பயணம் செய்ய முடியும்
அதேபோல, நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக கோவை வரை இயக்கப்படும் பகல் நேர சிறப்பு ரெயில் (வ.எண்.06321/06322) வருகிற 10-ந் தேதி முதல் இருமார்க்கங்களிலும் 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்ய முடியும். 
இந்த ரெயிலில், டி-9 முதல் டி-12 வரையிலான பெட்டிகள் முன்பதிவு இல்லாத பெட்டிகளாகும். ஒவ்வொரு பொதுப்பெட்டியிலும் சராசரியாக 90 இருக்கைகள் உள்ளன.

Next Story