வாகனம் மோதி ஒருவர் பலி


வாகனம் மோதி ஒருவர் பலி
x
தினத்தந்தி 26 Oct 2021 8:26 PM GMT (Updated: 26 Oct 2021 8:26 PM GMT)

வாகனம் மோதி ஒருவர் பலி

திருமங்கலம்
கள்ளிக்குடி அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி(வயது 45). கள்ளிக்குடியில் உள்ள அவரது உறவினரின் பலசரக்கு கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றார். மதுரை-விருதுநகர் நான்கு வழிச்சாலையில் வெள்ளகுளம் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே திருப்பதி உயிரிழந்தார். விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Next Story