பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பாக வேறு யாரும் செயல்பட கூடாது - கலெக்டர் தகவல்


பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பாக வேறு யாரும் செயல்பட கூடாது - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 27 Oct 2021 10:34 AM GMT (Updated: 27 Oct 2021 10:34 AM GMT)

பெண் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார்பாக வேறு யாரும் செயல்பட கூடாது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அனைத்து கிராம ஊராட்சி தலைவர்களுக்கு ஊராட்சிகளின் ஆய்வாளர்/மாவட்ட கலெக்டர் அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளின் பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் யாரையும் செயல்பட அனுமதிக்ககூடாது.

ஊராட்சி மன்ற கூட்டங்களிலும், ஊராட்சி சம்பந்தமான எந்த அலுவலகங்களிலும் பங்கேற்கவோ அல்லது தலையீடு செய்யவோ கட்டாயமாக அனுமதிக்கக்கூடாது. இந்த அறிவுரைகளை பின்பற்றாமல் செயல்படுவது தெரியவந்தால் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற கூட்டங்களில் கொண்டுவரப்படும் தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story