கொரோனாவால் 13 பேர் பாதிப்பு


கொரோனாவால் 13 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 27 Oct 2021 8:14 PM GMT (Updated: 27 Oct 2021 8:14 PM GMT)

கொரோனாவால் 13 பேர் பாதிப்பு

மதுரை
மதுரையில் கொரோனாவால் நேற்று 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 10 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்து 157 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 13 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். அதில் 9 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் மதுரையில் இதுவரை 73 ஆயிரத்து 776 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும் தற்போது ஆஸ்பத்திரியில் இருப்பவர்களின் எண்ணிக்கை 211 ஆக உள்ளது. மேலும் கொரோனாவிற்கு நேற்று மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

Next Story