போக்குவரத்து விதிமீறல்; 79 பேர் மீது வழக்கு

x
தினத்தந்தி 2 Nov 2021 2:33 AM IST (Updated: 2 Nov 2021 2:33 AM IST)
போக்குவரத்து விதிமீறல்; 79 பேர் மீது வழக்கு
மதுரை
மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 150 இருசக்கர வாகனங்கள் படம் பிடிக்கப்பட்டு வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை அதிவேகமாகவும், அதிக ஒலி எழுப்பியும் ஓட்டிபொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 112 இருசக்கர வாகனங்கள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் மீது இந்திய தண்டனைச் சட்ட வழக்குகள், மோட்டார் வாகனச் சட்டவழக்குகள் உள்பட மொத்தம் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 600 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





