கோவில்களில் பிரதோஷ பூஜை

x
தினத்தந்தி 2 Nov 2021 8:33 PM IST (Updated: 2 Nov 2021 8:33 PM IST)
கோவில்களில் பிரதோஷ பூஜை நடந்தது.
அலங்காநல்லூர்,
பாலமேடு பஸ் நிலையம் அருகே உள்ள சிவன் கோவிலில் ஐப்பசி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தன. இதில் அங்குள்ள சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், தீர்த்தம், வில்வ இலை உள்ளிட்ட பல்வேறு பூஜை நடந்தது. சுற்றுவட்டாரங்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி கும்பிட்டனர். இதற்கான ஏற் பாடுகளை பாலமேடு மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர். அலங்காநல்லூர் அய்யப்பன் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. இங்கும் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





