கொரோனாவுக்கு மூதாட்டி பலி


கொரோனாவுக்கு மூதாட்டி பலி
x
தினத்தந்தி 7 Nov 2021 8:31 PM GMT (Updated: 7 Nov 2021 8:31 PM GMT)

கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்

மதுரை, 
மதுரையில் நேற்று 12 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 6 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். மீதம் உள்ளவர்கள் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள். மதுரையில் இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 75 ஆயிரத்து 292 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல், நேற்று 10 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இவர்களில் 7 பேர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். நேற்றுடன் மதுரையில், 73 ஆயிரத்து 972 பேர் குணம் அடைந்து வீட்டிற்கு சென்று உள்ளனர். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 142 ஆக குறைந்துள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்பால் நேற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 82 வயது மூதாட்டி உயிரிழந்தார். இதன் மூலம் இது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1178 ஆக உள்ளது.

Next Story