ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கொரோனா; ஒருவர் பலி
x
தினத்தந்தி 8 Nov 2021 2:07 AM IST (Updated: 8 Nov 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 121 பேருக்கு பரிசோதனை செய்ததில், 67 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 4 ஆயிரத்து 760 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 52 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 3 ஆயிரத்து 331 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 62 வயது முதியவர் கொரோனா தொற்று ஏற்பட்டு, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 691 ஆக உயர்ந்தது. தற்போது தொற்று உள்ள 738 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
1 More update

Next Story