தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு


தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
x
தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
தினத்தந்தி 12 Nov 2021 9:39 PM IST (Updated: 12 Nov 2021 9:39 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

பொள்ளாச்சி


கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோழிபதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 45). தொழிலாளி. இவர் மீன்கரை ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது இருசக்கர வாகனம் மீது மோதியது. 

இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு திருச்சூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story