லாரியில் பேட்டரி திருட்டு

x
தினத்தந்தி 14 Nov 2021 11:34 PM IST (Updated: 14 Nov 2021 11:34 PM IST)
லாரியில் பேட்டரி திருட்டு
திருமங்கலம்,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 55). இவர் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு பேட்டரிகளை ஏற்றிக் கொண்டு லாரியில் வந்து கொண்டிருந்தார். திருமங்கலம் செக்கானூரணி சாலையில் உள்ள டீக்கடையில் டீ குடிப்பதற்காக லாரியை நிறுத்தினார். அப்போது லாரியின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த தார்ப்பாய் கிழிந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகோபால் லாரியின் உள்ளே பார்த்தபோது ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பேட்டரி திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர், திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





