ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 19 Nov 2021 8:36 PM GMT (Updated: 19 Nov 2021 8:36 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 74 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. தொற்றுக்கு பெண் பலியானாா்.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 294 பேருக்கு பரிசோதனை செய்ததில் 76 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 552 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 65 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 66 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 45 வயது பெண் கொரோனா தொற்று ஏற்பட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் கடந்த 17-ந்தேதி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 694 ஆக உயர்ந்தது. தற்போது தொற்று உள்ள 792 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story