வரும்முன் காப்போம் திட்டத்தில் முதல் தர சிகிச்சை-அமைச்சர் மூர்த்தி தகவல்

வரும்முன் காப்போம் திட்டத்தில் முதல் தர சிகிச்சை தரப்படுவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.
மதுரை
வரும்முன் காப்போம் திட்டத்தில் முதல் தர சிகிச்சை தரப்படுவதாக அமைச்சர் மூர்த்தி கூறினார்.
மக்களை தேடி மருத்துவம்
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளிச்சநத்தம் கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்து பள்ளி மாணவிக்கு கண் கண்ணாடிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். இதைதொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி வருமுன் காப்போம் திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தினார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த திட்டம் நிறுத்தப்பட்டது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து அதனை சிறப்பாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். மக்கள் மருத்துவமனையைத் தேடி போகாமல் மக்களைத் தேடி மருத்துவ வசதிகள் எல்லாம் சென்றடைவதற்காக ”மக்களை தேடி மருத்துவம்” என்ற அற்புதமான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மக்களின் இல்லங்களுக்கு சென்று ஒருங்கிணைந்த மற்றும் விரிவான மருத்துவ சேவைகள் வழங்கும் ஒரு உன்னதமான திட்டமாக செயல்பட்டு வருகின்றது.
பல் மருத்துவம்
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தைப் போல பல்வேறு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கோ அல்லது தனியார் மருத்துவமனைக்கோ சென்று தங்களது முழு உடலையும் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ள ஏதுவாக கலைஞரின் வருமுன் காப்போம் என்ற திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, குடல் நோய், குழந்தைகள் நல மருத்துவம், பெண்கள் நல மருத்துவம், கண் மருத்துவம், இருதய நோய், முதியோர் நல மருத்துவம் போன்றவற்றுக்கு சிறப்பு மருத்துவர்களால் முதல் தரசிகிச்சைகளும் செய்யப்படும். இலவசமாக 25 வகை ரத்த பரிசோதனைகள் மற்றும் 5 இதர பரிசோதனைகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி ஒத்தக்கடை கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் டாக்டர் அப்துல்கலாம் கலை அரங்கத்தையும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவ-மாணவிகள் சார்பாக அலங்கார தோரண வாயிலையும் மற்றும் உலகனேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அலங்கார தோரண வாயில் மற்றும் சுற்றுச்சுவரையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., துணை இயக்குனர்(மருத்துவம்) செந்தில்குமார், முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்து
Related Tags :
Next Story






