ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Nov 2021 9:24 PM GMT (Updated: 20 Nov 2021 9:24 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 524 பேருக்கு பரிசோதனை செய்ததில், 74 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 1 லட்சத்து 5 ஆயிரத்து 620 ஆக உயர்ந்தது.
மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 62 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 128 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 694 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 798 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story