பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 22 Nov 2021 3:30 PM GMT (Updated: 22 Nov 2021 3:30 PM GMT)

பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

பொள்ளாச்சி

செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

பள்ளி மாணவன் 

பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவருடைய மகன் சஞ்சீவ் சுரேந்திரா (வயது 14). இவர் பொள் ளாச்சியை அடுத்த ஜமீன்ஊத்துக்குளியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். 

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சஞ்சீவ் சுரேந்திரா வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபோது செல்போனில் கேம் விளையாடியதாக தெரிகிறது. 

தூக்குப்போட்டு தற்கொலை 

இதை பெற்றோர் பலமுறை கண்டித்தும் கேட்காமல் அவன் தொடர்ந்து கேம் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்ததுடன், சரவணன் வேலைக்கு செல்லும் போது செல்போனை எடுத்து சென்றதாக தெரிகிறது. இதனால் கேம் விளையாட முடியாத ஏக்கத்தில் சஞ்சீவ் சுரேந்திரா தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த பொள்ளாச்சி மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story