மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 24 Nov 2021 8:27 PM GMT (Updated: 24 Nov 2021 8:27 PM GMT)

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

வாடிப்பட்டி
வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் ரஞ்சித்குமார்(வயது 27). இவர் மாதாகோவில் அருகில் பாஸ்ட் புட் கடை தள்ளுவண்டியில் வைத்து நடத்தி வந்தார். இந்தநிலையில் நேற்று  மாலை 6 மணிக்கு கடையை எடுத்து வைத்து கொண்டிருந்தபோது பேட்டரியில் இருந்த மின்சார வயரில் கைதவறி பட்டதால் அவர் மீது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். உடனே சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story