ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்


ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்
x
தினத்தந்தி 24 Nov 2021 10:05 PM GMT (Updated: 24 Nov 2021 10:05 PM GMT)

ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.

சென்னிமலை
ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 6 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. 
மாற்றுத்திறனாளிகள்
ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் சென்னிமலை ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் 6 ஜோடி மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. ஈரோடு உணர்வுகள் அமைப்பின் சார்பில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சீர் வரிசைகளோடு நடைபெற்ற இந்த திருமணத்திற்கு எம்.சி.ஆர் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் ரிக்சன் தலைமை தாங்கினார். யூனிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் நவீன் குமார், ஸ்ரீபதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீநிவாச மூர்த்தி உள்பட பலர் முன்னிலை வகித்தனர். 
உணர்வுகள் அமைப்பின் தலைவரும், ராஜீவ்காந்தி பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவருமான மக்கள் ஜி.ராஜன் அனைவரையும் வரவேற்றார். இதில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஈரோடு அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபர்கள் எம்‌.எஸ்.தங்கராஜ், அருள்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.எம்.பழனிச்சாமி மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
சீர்வரிசைகள்
மணமக்களான விஜயகுமார்- மகேஸ்வரி, சிவசண்முகம் - நித்யா, குமரேசன் - காளீஸ்வரி, ஜனார்த்தனன் - விஜயகுமாரி, பிரசாத் - சுபாஷினி, ருத்ர கோடி - வனிதா உள்ளிட்ட ஆகிய 6 ஜோடிகளுக்கு மும்மத வழிபாட்டு முறையில் இந்த திருமணம் நடைபெற்றது. 
மணமக்களுக்கு வீட்டு உபயோக பாத்திரங்கள், சமையல் பொருட்கள், வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களோடு, தங்கத்தாலி, பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, வெள்ளி மெட்டி உள்ளிட்ட துணி வகைகளோடு சீர் வரிசைகள் கொடுக்கப்பட்டது.
மேலும் திருமணத்திற்கு வந்திருந்த சுமார் 1,300 பேருக்கு விருந்து நடைபெற்றது. முடிவில் ஈரோடு மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் துரைராஜ் நன்றி கூறினார்.

Next Story