திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு


திருவள்ளூர்  அருகே பாம்பு கடித்து விவசாயி சாவு
x
தினத்தந்தி 26 Nov 2021 2:37 PM GMT (Updated: 26 Nov 2021 2:37 PM GMT)

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அருகே பாம்பு ஒன்று விவசாயியை கடித்தது. சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்துபோனார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் திருமணிகுப்பம் கிராமம் சின்னத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 56). விவசாயி. கடந்த 24-ந்தேதியன்று சந்திரசேகர் தன்னுடைய வீட்டில் வளர்க்கும் மாடுகளுக்கு வைக்கோல் போடுவதற்காக வைக்கோல் எடுக்க சென்றார். வைக்கோல் போரில் கை வைத்து எடுக்கும்போது அதன் உள்ளே இருந்த பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதை பார்த்த அவரது வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அவரை ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சந்திரசேகர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story