காதல் மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 Nov 2021 9:02 AM GMT (Updated: 28 Nov 2021 9:02 AM GMT)

காதல் மனைவி சேர்ந்து வாழ மறுத்ததால் நடன கலைஞர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திரு.வி.க. நகர், 

சென்னை ஐ.சி.எப். காந்தி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் என்ற ஆண்டனி (வயது 20). நடன கலைஞரான இவர், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சர்மிளா (19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக 4 மாதங்களுக்கு முன்பு சர்மிளா, கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

நேற்று முன்தினம் கிறிஸ்டோபர் தனது காதல் மனைவி சர்மிளாவுக்கு போன் செய்து மீண்டும் சேர்ந்து வாழலாம் என்று அழைத்தார். ஆனால் அவர் வரமறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த கிறிஸ்டோபர், தனது ‘வாட்ஸ்அப் ஸ்டேட்டசில்’ ஆன்மா சாந்தி அடையட்டும் என்பதை குறிக்கும் வகையில் ஆங்கிலத்தில் ‘ஆர்.ஐ.பி.’ என பதிவு செய்து இருந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் டக்ளஸ் என்பவர் கிறிஸ்டோபரை தொடர்புகொண்டார். ஆனால் அவர் போனை எடுக்காததால் நேரில் சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது, கிறிஸ்டோபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது.

இதுபற்றி ஐ.சி.எப். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story