ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 28 Nov 2021 8:47 PM GMT (Updated: 28 Nov 2021 8:47 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 72 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 7 ஆயிரத்து 796 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 68 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று புதிதாக 72 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 188 ஆக உயர்ந்தது. இதில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 668 பேர் குணமடைந்தார்கள். நேற்று மட்டும் 73 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். தற்போது 824 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 696 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story