ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Dec 2021 8:38 PM GMT (Updated: 3 Dec 2021 8:38 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 59 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 6 ஆயிரத்து 858 பேருக்கு பரிசோதனை செய்ததில் 65 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. இந்த நிலையில் நேற்று சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 59 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 492 ஆக உயர்ந்தது. மேலும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 64 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 18 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 698 பேர் பலியாகியுள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 776 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story