சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு ஏலம்- ஒரே நாளில் 630 ரூபாய் விலை உயர்ந்தது


சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு ஏலம்- ஒரே நாளில் 630 ரூபாய் விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 12 Dec 2021 2:53 AM IST (Updated: 12 Dec 2021 2:53 AM IST)
t-max-icont-min-icon

சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் 630 ரூபாய் விலை உயர்ந்தது.

சத்தியமங்கலம்
சத்தி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,520-க்கு ஏலம் போனது. ஒரே நாளில் 630 ரூபாய் விலை உயர்ந்தது. 
பூக்கள் ஏலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு நாள்தோறும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். நேற்று நடந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் 2 டன் பூக்களை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள்.
 இந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.2,520-க்கும், முல்லை ரூ.840-க்கும், காக்கடா ரூ.750-க்கும், செண்டுமல்லி ரூ.165-க்கும், பட்டுப்பூ ரூ.245-க்கும், ஜாதிமல்லி ரூ.650-க்கும், கனகாம்பரம் ரூ.1,250-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.360-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும் ஏலம் போனது. 
விலை உயர்ந்தது
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.1,890-க்கும், முல்லை ரூ.820-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டுமல்லி ரூ.135-க்கும், பட்டுப்பூ ரூ.230-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.50-க்கும், அரளி ரூ.360-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.220-க்கும் ஏலம் போனது. 
நேற்று முன்தினம் ஏலம் போன விலையை நேற்றைய விலையுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது மல்லிகைப்பூ ஒரு கிலோ 630 ரூபாய் விலை உயர்ந்தது. இதேபோல் முல்லை 20 ரூபாயும், காக்கடா 50 ரூபாயும், செண்டுமல்லி 30 ரூபாயும், பட்டுப்பூ 15 ரூபாயும் விலை அதிகரித்தது.  
பனிப்பொழிவு காரணமாக பூக்கள் விளைச்சல் குறைந்து விட்டது. அதே நேரத்தில் முகூர்த்த நாள் என்பதால் தேவையும் அதிகரித்தது. அதனால் பூக்கள் விலை கூடியதாக சங்க நிர்வாகிகள் கூறினார்கள்.
1 More update

Next Story