வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை

x
தினத்தந்தி 16 Dec 2021 5:22 PM IST (Updated: 16 Dec 2021 5:22 PM IST)
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வெல்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 23). இவர் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள அலமேலுமங்கலாபுரம் பகுதியில் தங்கி வெல்டிங் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 11-ந்தேதி அவர் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்குப்போட்டுக் கொண்டார்.
இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹாிஷ், நேற்று முன்தினம் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





