கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது


கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 16 Dec 2021 8:34 PM GMT (Updated: 16 Dec 2021 8:34 PM GMT)

கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசில் சிக்கியது.

ஊஞ்சலூர்
கொடுமுடி அருகே கிணற்றில் குதித்து பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசில் சிக்கியது.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பிளஸ்-2 மாணவி
நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் அருகே உள்ள கண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மகள் சவுமியா (வயது 17). பழனிச்சாமியின் அண்ணன் ரவி என்பவர் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள கொந்தளம் வெளியங்காட்டுபுதூரில் வசித்து வருகிறார். சவுமியாவுக்கு ரவி பெரியப்பா முறை ஆவார். 
இதனால் தனது பெரியப்பா ரவியின் வீட்டில் சவுமியா தங்கி இருந்து சிவகிாி அம்மன் கோவில் பகுதியில் உள்ள அரசு மகளிர் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். 
தற்கொலை
கடந்த 14-ந் ேததி, வீட்டு வேலைகளை செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் என சவுமியாவிடம், ரவி சொன்னதாக கூறப்படுகிறது. இதனால் சவுமியா மனமுடைந்து கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மாணவியின் தந்தை பழனிச்சாமி, ரவி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர்களால் சவுமியாவை கண்டுபிடிக்க முடியவில்லை. 
இந்த நிலையில் நேற்று ரவியின் வீட்டின் அருகே உள்ள தோட்டத்து கிணற்றில் சவுமியா பிணமாக மிதந்தார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சவுமியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், ‘கிணற்றில் குதித்து சவுமியா தற்கொலை செய்து கொண்டார்,’    என்பது தெரியவந்தது. 
உருக்கமான கடிதம்
மேலும் சவுமியா எழுதிய கடிதம் ஒன்றையும் ரவியின் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘பெரியப்பா உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். என்னால் யாரும் கஷ்டப்பட வேண்டாம்,’ என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது.  தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story