பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா


பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா
x
தினத்தந்தி 20 Dec 2021 7:59 PM IST (Updated: 20 Dec 2021 7:59 PM IST)
t-max-icont-min-icon

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா


பேரூர்

பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஆருத்ரா தரிசன விழா 

மேலைச்சிதம்பரம் என்று அழைக்கப்படும் பேரூரில் பட்டீசுவரர், பச்சைநாயகி அம்மன் கோவில் உள்ளது. 

இந்த கோவிலில் ஆருத்ரா தரிசன விழா பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது. 

அதைத் தொடர்ந்து, காலசந்தி பூஜை நடத்தப்பட்டு நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், சடையநாதர் ஆகிய மூர்த்திக ளுக்கு சிறப்பு திருமஞ்சனம், 

4 மணிக்கு மேல் பால், பன்னீர், சந்தனம், திருமஞ்சனப் பொடி, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை திரவியங்க ளால் அபிஷேகம் செய்யப்பட்டு, ருத்ர கலச தீர்த்தாபிஷேகம் நடந்தது.

அதைத்தொடர்ந்து, நடராஜர், சிவகாமி அம்பாளுக்கு புது அங்க வஸ்திரம் சாத்துபடி செய்யப்பட்டு, கோபூஜை, மகாதீபாராதனை நடந்தது. அப்போது, வேத மந்திரம், திருவம்பாவை முதலான உபசாரங்களும் நடந்தது.

பட்டிசுத்துதல் நிகழ்ச்சி

இதையடுத்து, சாமி உள்வீதி பிரகாரத்தில் வலம் வந்து ராஜகோபுரம் வழியாக, வெளிவந்து, அரசமர மேடையில் 3 முறை வலம் வரும் பட்டி சுத்துதல் நிகழ்ச்சி நடந்தது. 

இதையடுத்து, கோவிலின் முக்கிய ரத வீதிக ளின் வழியே, மேளதாளங்கள் முழங்க திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. 

அப்போது ரோட்டின் இருபுறமும் நின்ற ஏராளமான பக்தர்கள் சாமியை தரிசித்தனர். 

கோவிலின் மேற்கு ரத வீதியின் வழியே வரும் போது, மேற்கு கோபுர வாசல் முன்பாக மாணிக்கவாசகருக்கு நடராஜ பெரு மான் அருள் காட்சி கொடுக்கும் பொருட்டு, மாலை எடுத்து சாத்தப் பட்டது. 

திருஊடல்

உடனே சிவகாமி அம்பாள், நடராஜரை வலம் வந்து மேற்கு கோபுர வாசல் வழியே கோவிலுக்குள் எழுந்தருளினர். 

அப்போது ராஜகோபுர வாசலின் உள்புறம் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து, நடராஜர் வெளி வீதி வழியே வலம் வந்து ராஜகோபுர முன்வாசலில் எழுந்தருளினார். 

அப்போது சுந்தரசாமி, பல்லக்கில் எழுந்தருள செய்து, ராஜ கோபுர வாசல் திறக்கப்பட்டு, சிவகாமி அம்பாள் மற்றும் நடராஜ பெருமானுக்கும், 3 முறை திருஊடல் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.

அப்போது, கோவில் ஓதுவா மூர்த்தி ஊடல் பாடல்களை பாடினார். அதைத்தொடர்ந்து, நடராஜ பெருமானிடம் இருந்து, ஒதுவா மூர்த்தியி டம் மாலை கொடுக்கப்பட்டு, சிவகாமி அம்பாளுக்கு சாத்துபடி செய்யப்பட்டது. 

உடனே சிவகாமி அம்பாள், ராஜகோபுரம் வழியே வந்து நடராஜ பெருமானை வலம் வந்து, இருவரும் சமேதரராக கோவிலில் உள்ள கனகசபை மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசன காட்சி அளித்தனர். 
1 More update

Next Story