சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2,117-க்கு ஏலம்; ஒரே நாளில் 577 ரூபாய் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு 577 ரூபாய் விலை உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 117-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஒரே நாளில் மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு 577 ரூபாய் விலை உயர்ந்து ரூ.2 ஆயிரத்து 117-க்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2 டன்
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடந்தது.
இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 2 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
கிலோ ரூ.2,117
நேற்றைய ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.2 ஆயிரத்து 117-க்கும், முல்லை ரூ.1,120-க்கும், காக்கடா ரூ.900-க்கும், செண்டுமல்லி ரூ.145-க்கும், பட்டுப்பூ ரூ.185-க்கும், ஜாதிமல்லி ரூ.759-க்கும், கனகாம்பரம் ரூ.950-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.360-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.180-க்கும் விற்பனை ஆனது.
நேற்று முன்தினம் நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,540-க்கும், முல்லை ரூ.760-க்கும், காக்கடா ரூ.700-க்கும், செண்டுமல்லி ரூ.125-க்கும், பட்டுப்பூ ரூ.125-க்கும், ஜாதிமல்லி ரூ.700-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.25-க்கும், அரளி ரூ.350-க்கும், துளசி ரூ.30-க்கும், செவ்வந்தி ரூ.160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.577-ம், முல்லை ரூ.360-ம், காக்கடா ரூ.200-ம், செண்டுமல்லி ரூ.20-ம், பட்டுப்பூ ரூ.60-ம், ஜாதிமல்லி ரூ.50-ம், கனகாம்பரம் ரூ.400-ம், சம்பங்கி ரூ.55-ம், அரளி ரூ.10-ம், துளசி ரூ.10-ம், செவ்வந்தி ரூ.20-ம் விலை உயர்ந்து ஏலம் போனது.
மல்லிகைப்பூ ஒரே நாளில் கிலோ ஒன்று ரூ.577 விலை உயர்ந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பனிப்பொழிவு
இதுகுறித்து பூ மார்க்கெட் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறுகையில், ‘தற்போது சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பனிப்பொழிவு அதிக அளவில் உள்ளது. இதனால் பூக்கள் அதிக அளவில் விளையவில்லை. எனவே மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைந்துவிட்டது. அதே வேளையில் பூக்களின் தேவை அதிகரித்து இருப்பதால் வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை ஏலம் எடுத்தனர். இதன்காரணமாக பூக்கள் விலை உயர்ந்து ஏலம் போனது,’ என்றனர்.
Related Tags :
Next Story






