ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா; முதியவர் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. முதியவர் பலியானாா்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 480 ஆக உயர்ந்தது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 847 பேருக்கு பரிசோதனை செய்ததில் 47 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 54 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மாவட்டத்தில் 1 லட்சத்து 6 ஆயிரத்து 223 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 67 வயது முதியவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 710 ஆக உயர்ந்தது. தற்போது தொற்று உள்ள 547 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Related Tags :
Next Story






