கருங்கல்பாளையம் சந்தைக்கு 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன

கருங்கல்பாளையம் சந்தைக்கு 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன.
ஈரோடு
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மாட்டுச்சந்தை கூடி வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் கூடிய சந்தைக்கு 50 கன்றுக்குட்டிகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. இதில் கன்றுக்குட்டி ஒன்று ரூ.8 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று வழக்கமான சந்தை கூடியது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
300 பசு மாடுகள், 200 எருமை மாடுகள் என மொத்தம் 500 மாடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் எருமை மாடு ஒன்று ரூ.27 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரையும், பசு மாடு ஒன்று ரூ.32 ஆயிரம் முதல் ரூ.58 ஆயிரம் வரையும் விற்பனையானது.
கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வந்து, விவசாயிகளிடம் நேரடியாக விலைபேசி மாடுகளை பிடித்து வாகனங்களில் ஏற்றி சென்றனர். வழக்கம்போல் நேற்று கூடிய சந்தைக்கும் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இதனால் மாடுகள் விற்பனை மந்தமாக இருந்ததாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






