கோபி அருகே வாய்க்காலில் குதித்து மில் உரிமையாளர் தற்கொலை


கோபி அருகே வாய்க்காலில் குதித்து மில் உரிமையாளர் தற்கொலை
x
தினத்தந்தி 24 Dec 2021 9:17 PM GMT (Updated: 24 Dec 2021 9:17 PM GMT)

கோபி அருகே வாய்க்காலில் குதித்து மில் உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டாா்.

கடத்தூர்
கோபி பாரதி வீதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 58). இவருடைய மனைவி சுகந்தி (48). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கோபி அருகே தாசம்பாளையத்தில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் மில்லில் பொதுமேலாளராக பணியாற்றி வந்தார். மேலும் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தின் 3 உரிமையாளர்களில் தியாகராஜனும் ஒருவர் ஆவார். 
இந்த நிலையில் நிறுவன தொழில் தொடர்பாக உரிமையாளர்களுக்கு இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மில்லுக்கு செல்வதாக கூறிவிட்டு காரில் தியாகராஜன் சென்றார். ஆனால் அவர் கோபியை அடுத்த வேட்டைக்காரன் கோவில் அருகே உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு காரில் சென்றார். அங்கு காரை நிறுத்திவிட்டு திடீரென அவர் வாய்க்காலில் குதித்தார். இதில் தண்ணீரில் மூழ்கி இறந்தார். இதுபற்றி அறிந்ததும் சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தியாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story