ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Dec 2021 2:33 AM IST (Updated: 26 Dec 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் 5 ஆயிரத்து 798 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 42 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 563 ஆக உயர்ந்தது. இதுவரை 1 லட்சத்து 6 ஆயிரத்து 329 பேர் குணமடைந்து உள்ளனர். இதில் நேற்று மட்டும் 54 பேர் கொரோனாவில் இருந்து மீண்டார்கள். தற்போது 524 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 710 பேர் பலியாகி உள்ளனர்.
1 More update

Next Story