பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
கோவை
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரதம்
அகில இந்திய பட்டதாரி பொறியாளர் தொலைத்தொடர்பு(பி.எஸ்.என்.எல்.) அதிகாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கோவை மாவட்ட தலைமை பொது மேலாளர் அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தகுதி உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும். கால நிர்ணய பதவி உயர்வு திட்டத்தை திரும்ப பெற வேண்டும். ஊதிய விகிதத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி புதிய ஊதிய விகிதத்தை அமல்படுத்த வேண்டும். துணை பொது மேலாளர் பதவிகளுக்கான நேரடி நியமன விதிகளை நீக்க வேண்டும்.
தொடர் போராட்டம்
இளநிலை தொலைத்தொடர்பு அதிகாரி மற்றும் இளநிலை கணக்கியல் அதிகாரி ஆகிய இடங்களுக்கான பதவி உயர்வு திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும். தற்காலிக பதவி உயர் அளிக்காமல் நிரந்தர பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி வரை தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இதில் மாநில பொருளாளர் சுப்பிரமணியன், ‘சஞ்சார் நிகாம்’ அதிகாரிகள் சங்க மாநில துணை செயலாளர் உமாபதி ஆனந்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story






