பொள்ளாச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்


பொள்ளாச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்
x
தினத்தந்தி 29 Dec 2021 9:57 PM IST (Updated: 29 Dec 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 28 வயது பெண் வசித்து வருகிறார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் ஆவார். இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டது. 

இதையடுத்து அவரை பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதனை செய்ததில், அவர்  கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.  விசாரணையில், மண்ணூர் ராமநாதபுரத்தை சேர்ந்த பெயிண்டர் பாலசுப்பிரமணியம் (வயது 39) என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

 இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் பதுங்கியிருந்த பாலசுப்பிரமணியத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 More update

Next Story