சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 28 பேர் பாதிப்பு


சேலம்  மாவட்டத்தில் கொரோனாவுக்கு 28 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 30 Dec 2021 3:35 AM IST (Updated: 30 Dec 2021 3:35 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 28 பேர் பாதிக்கப்பட்டனர்.

சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 29 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று புதிதாக 28 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 13 பேர், ஒன்றியத்தில் 6 பேர், ஆத்தூர் பகுதிகளில் 9 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 43 பேர் குணமடைந்து விட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 333 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 1 லட்சத்து 2 ஆயிரத்து 449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலத்தை சேர்ந்த 59 வயதுடைய ஆண் ஒருவர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்தார். இவர் உள்பட மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,727 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story