போலீஸ் ஐஜி தலைமையில் 5 பேரிடம் விசாரணை

போலீஸ் ஐஜி தலைமையில் 5 பேரிடம் விசாரணை
கோவை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் போலீஸ் ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 பேரிடம் விசாரணை நடைபெற்றது.
கோடநாடு கொலை வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக எஸ்டேட் உள்ளது.
இங்குள்ள பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு காவலாளியை கொலை செய்து கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இது தொடர்பாக சயான், மனோஜ், திபு, ஜித்தின் ஜாய் உள்ளிட்ட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசார ணை நீலகிரி மாவட்ட கோர்ட்டில் நடந்து வருகிறது.
தனிப்படைகள் முழுமையான விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலர் அடுத்தடுத்து இறந்ததால் மர்மம் நீடிக்கிறது.
5 பேரிடம் விசாரணை
இந்த வழக்கு தொடர்பாக 80-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4-வது குற்றவாளியான திபுவிடம் கடந்த 6-ந் தேதி கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் விசாரணை நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இந்த கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திபு, சம்ஷீர் அலி, சதீசன், பிஜின் குட்டி, ஜித்தின் ஜாய் ஆகிய 5 பேரிடம் கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் போலீஸ் ஐ.ஜி சுதாகர் தலைமையில் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
யாருக்கு தொடர்பு?
அப்போது, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது? ஆவணங்கள் யாரிடம் கொடுக்கப்பட் டது? யார் திட்டம் தீட்டியது? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு தகவல்கள் திரட்டப்பட்டன.
அதில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்டத்துக்கு விசாரணை செல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






