ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை


ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை
x
ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை
தினத்தந்தி 8 Jan 2022 9:06 PM IST (Updated: 8 Jan 2022 9:06 PM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 43). ஆட்டோ டிரைவர். குடும்ப தகராறு காரணமாக அவரது மனைவி சுனிதா (39) செல்வராஜை விட்டு பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சூளேஸ்வரன்பட்டியலில் அவரது மனைவி வேலை பார்க்கும் கடைக்கு வந்து மீண்டும் குடும்ப நடத்த வருமாறு செல்வராஜ் அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்துள்ளார். 

ஆத்திரத்தில் செல்வராஜ் உடலில் மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டு ஆட்டோவில் ஏறிக்கொண்டார். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதனால் ஆட்டோவும் தீ பிடித்து  சேதம் அடைந்தது. இதற்கிடையில் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-------
1 More update

Next Story