செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,512 பேர் பாதிப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,512 பேர் பாதிப்பு
x
தினத்தந்தி 10 Jan 2022 11:33 AM GMT (Updated: 10 Jan 2022 11:33 AM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,512 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

1,512 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 1,512 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 81 ஆயிரத்து 616 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 79 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 2,555 பேர் உயிரிழந்துள்ளனர். 5,982 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 343 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 77 ஆயிரத்து 613 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 75 ஆயிரத்து 2 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1271 -ஆக உயர்ந்துள்ளது. 1,340 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story