திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 931 பேர் பாதிப்பு

x
தினத்தந்தி 13 Jan 2022 3:00 PM IST (Updated: 13 Jan 2022 3:00 PM IST)
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது மீண்டும் தொற்று அதிகரித்து நேற்று கொரோனா தொற்றால் 931 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 617 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 484 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 5 ஆயிரத்து 262 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் 1,871 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று கொரோனா தொற்றால் ஒருவர் பலியாகி உள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





