2 டன் கரும்புகளால் காளை மாடுகள் உருவம்

காஞ்சீபுரம் அருகே 2 டன் கரும்புகளால் காளை மாடுகள் உருவம் அமைத்து பொங்கல் வைத்து தனது குடும்பத்தினருடன் வித்தியாசமான வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.
காஞ்சீபுரம் அருகேயுள்ள கீழ்கதிர்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாய குடும்பத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தனது வீட்டின் அருகே 2 டன் கரும்புகளால் 2 காளை மாடுகள் போன்ற உருவம் அமைத்து புதுப்பானையில் பொங்கல் வைத்து தனது குடும்பத்தினருடன் வித்தியாசமான வகையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். பொங்கல் பண்டிகையின் சிறப்பையும், விவசாயத்தொழிலில் அழிந்து வரும் காளை மாடுகளின் பயன்பாட்டினை இளம் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் விவசாயிகளையும், விவசாய தொழிலே சிறப்பிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டதாக செந்தில்குமார் தெரிவித்தார்.
விவசாயிகளையும், காளை மாடுகளின் சிறப்பை விளக்கும் வகையில் அமைக்கப்பட்ட இதனை கிராம மக்கள் ஏராளமானோர் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு சென்றனர்.
Related Tags :
Next Story






