செங்கல்பட்டு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் விழிப்புணர்வு


செங்கல்பட்டு மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்களிடம் விழிப்புணர்வு
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் முககவசம் அணியாத தொழிலாளர்கள்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சிக்குட்பட்டது திருத்தேரி பஸ் நிலையம். இங்கிருந்து ஒரகடத்தில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் செல்கின்றனர். மேலும் தனியார் நிறுவன பஸ்களில் பயணம் செய்யும் தொழிலாளர்கள் பலர் முக கவசம் அணிவதில்லை என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன.

அதன்பேரில் உடனடி நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் கருணாகரன் ஆகியோர் செங்கல்பட்டில் இருந்து ஒரகடம் நோக்கி சென்ற அனைத்து தனியார் பஸ்களில் ஏறி உள்ளே சென்று அறிவுரை வழங்கினார்கள். மேலும் ஷேர் ஆட்டோக்களில் முக கவசம் அணியாமல் பயணம் செய்த பயணிகளிடமும், டிரைவர்களிடமும் முக கவசத்தின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


Next Story