கூடுவாஞ்சேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது


கூடுவாஞ்சேரி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 Jan 2022 6:35 PM IST (Updated: 20 Jan 2022 6:35 PM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் திருட்டுத்தனமாக மது விற்ற 2 பேர் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அருகே உள்ள ஒரு பெட்டிக்கடையில் அரசு விடுமுறையான தைப்பூச தினத்தில் திருட்டுத்தனமாக மது விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முத்து (வயது 35) என்பவர் திருட்டுத்தனமாக மது விற்றுக்கொண்டிருந்தார். உடனடியாக போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதேபோல மறைமலைநகர் அண்ணா சாலை பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்று கொண்டிருந்ததாக மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story