செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு


செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 20 Jan 2022 1:48 PM GMT (Updated: 20 Jan 2022 1:48 PM GMT)

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 2,194 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

5 பேர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 2,194 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 3,600-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 748 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,568-ஆக உயர்ந்துள்ளது. 17,285 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 718 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84 ஆயிரத்து 535-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 77 ஆயிரத்து 988 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,280-ஆக உயர்ந்துள்ளது. 5,267 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story