2 பேரை குற்றவாளியாக அறிவிக்க நடவடிக்கை

2 பேரை குற்றவாளியாக அறிவிக்க நடவடிக்கை
கோவை
கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் சீனியப்பன். வியாபாரி. இவர் ஸ்கூட்டரில் ரூ.35 ஆயிரம் வைத்து பூட்டிவிட்டு அங்குள்ள கோவிலில் சாமி கும்பிட சென்றார்.
அப்போது அவரது ஸ்கூட்டரில் இருந்த ரூ.35 ஆயிரம் பணத்தை திருடி விட்டு 2 பேர் தப்பிக்க முயன்றனர்.
அவர்களை பிடிக்க முயன்ற போது சீனியப்பனை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவம் கடந்த 26.3.1990-ம் ஆண்டு நடந்தது.
இது குறித்த புகாரின் பேரில் பெரிய கடை வீதி போலீசார், இலங்கை மட்டகளப்பு பகுதியை சேர்ந்த லீமா என்ற மகேந்திரன், ராஜ் என்ற ஆனந்தராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் கடந்த 1992-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பிறகு அவர்கள் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகினர்.
எனவே அவர்கள் 2 பேரையும் பிடிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதன்பிறகும் அவர்கள் போலீசாரிடம் பிடிபடாமல் உள்ளது.
இந்த வழக்கில் கடந்த 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் அவர்கள் 2 பேரையும் குற்றவாளிகளாக அறிவிக்க பெரியகடை வீதி போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






