மதுரையில் புதிதாக 622 பேருக்கு கொரோனா


மதுரையில் புதிதாக 622 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Jan 2022 7:19 PM GMT (Updated: 23 Jan 2022 7:19 PM GMT)

மதுரையில் புதிதாக 622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 602 பேர் குணம் அடைந்தனர்.

மதுரை,

மதுரையில் புதிதாக 622 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 602 பேர் குணம் அடைந்தனர்.

622 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்று புதிதாக 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று புதிதாக 622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. நேற்று 602 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து வீட்டிற்கு சென்றனர். கொரோனாவால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை.

4,816 பேருக்கு சிகிச்ைச

மதுரையில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 4 ஆயிரத்து 816 ஆக உள்ளது. அவர்களில், 3 ஆயிரத்து 550 பேர் வீட்டு தனிமைப்படுத்துதலிலும், மீதமுள்ளவர்கள் கொரோனா கண்காணிப்பு மையங்கள், தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கிறார்கள். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேரும் மதுரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story