ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 23 Jan 2022 9:34 PM GMT (Updated: 23 Jan 2022 9:34 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
1,220 பேர்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 186 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 1,066 பேருக்கு தொற்று உறுதியானது. இந்தநிலையில் நேற்று 1,220 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தினமும் சுமார் 200 பேருக்கு கூடுதலாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது.
721 பேர் பலி
ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 418 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 406 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று மட்டும் 554 பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். 
தற்போது 6 ஆயிரத்து 291 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மொத்தம் 721 பேர் பலியாகி உள்ளனர்.

Next Story